மருத்துவக் கழிவுகளால் மாசடையும் காவிரி!

மருத்துவக் கழிவுகளால் மாசடையும் காவிரி!

திருச்சியின் பெருமைக்கும் வரலாற்று முன்னுதாரணமாக விளங்கி வருவது காவிரி ஆறு.இவ்வளவு நாளாக காவிரியாறு கழிவுநீரால் குப்பைகளால் அம்மா மண்டபம் போன்ற இடங்களில் காணப்படும் நெகிழிப் பொருட்களால் மாசடைந்தது போக தற்போது மருத்துவ கழிவுகளாலும் மாசடைந்து வருகிறது.

திருச்சி அண்ணா சிலை அருகே உள்ள ஓடத் தெரு சுரங்கப்பாதை அருகே காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டிக் குவித்துள்ளனர். இக்கழிவுப்பொருட்கள் காவிரியாற்றில் அடித்து செல்லப்பட்டு வருகிறது ஏற்கனவே காவேரி ஆறு மாசடைந்த நிலையில் காணப்பட்டு வருவதுடன் இன்னும் மேலும் மாசடைய ஏதுவாக இதுபோன்ற பொருட்களை கொட்டுவதால் அதிக வாய்ப்புகள் உள்ளது .

அருகில் குளித்து, குடித்து வரும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருச்சி மக்களே காவிரி ஆற்றை நம்பியிருக்கும் நிலையில் இப்போது காவிரி ஆற்றை யார் காப்பாற்றுவது?என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது!