திருச்சி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:

திருச்சி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதேபோல் டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.