சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய் - வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் - களமிறங்கிய திருச்சி காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள்!

சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய் - வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் - களமிறங்கிய திருச்சி காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள்!

ஆயுத பூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு காலை முதலே ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பொது மக்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில் இரவு நேரங்களிலும் அதிகமான பேர் தற்போது வரை பூஜையில் ஈடுபட்டுக் கொண்டே வருகின்றனர்.பூஜைக்குப் பிறகு உடைக்கப்படும் தேங்காய் மற்றும் பூசணிக்காய்கள் சாலைகளில் அப்படியே போட்டு விடுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த வழுக்கும் தன்மை கொண்ட பூசணிக்காயால் விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இந்த பூசணிக்காயில் ஏற்றி சிலர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதுவும் வெளிச்சம் இல்லாத சாலைகளில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே இதனை தவிர்ப்பதற்காக திருச்சி போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் shine TREEchy அமைப்பின் தன்னார்வலர்கள் தற்போது திருச்சி மாநகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் இந்த பூசணி காய்களை அகற்றி வருகின்றனர். குறிப்பாக திருச்சி கன்டோன்மென்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மாலை முதலே ஒலிபெருக்கியில் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். தற்போது பூசணிக்காய்கள் உடைக்கப்பட்ட இடங்களை அகற்றியும் வருகிறார். 

மேலும் இனிமேல் வரும் காலங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பூஜை செய்து பூசணி காய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர் தன்னார்வலர்கள் மற்றும் போக்குவரத்து துறையினர்.

Advertisement