மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாலை மறியல்!!

மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாலை மறியல்!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல கட்சியினர் போராட்டத்தில் இறங்கி வந்தனர்.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் சட்டங்களை கைவிட கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.