10 நாட்களாக கிடக்கும் குப்பை! என்ன செய்கிறது திருச்சி மாநகராட்சி?

10 நாட்களாக கிடக்கும் குப்பை! என்ன செய்கிறது திருச்சி மாநகராட்சி?

மக்கள் வெளியில் நடமாட கூடாது.வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால்,திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை மெயின் ரோடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குப்பை எடுக்காமல் இருக்கின்றனர். இது மாதிரி சமயங்களில் குப்பைகளை அகற்றி மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி 10 நாட்களாக குப்பை எடுக்காத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதனை கண்டுகொள்ளுமா திருச்சி மாநகராட்சி?