தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நவம்பர் மாதம் 14.11.2020 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோருபவருக்கு  இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement


 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நவம்பர் மாதம் 14.11.2020 அன்று தீபாவளி பண்டிகை 2020ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 23.10.2020க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், 23.10.2020 க்குப் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாட்டாது. மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.