பெரியார் சிலைக்கு காவி பூசுவதில் நம்பிக்கையில்லை.சாதி கலவரத்தை உருவாக்கும் முயற்சி என இந்து முன்னணி மாநிலத் தலைவர் பேட்டி

பெரியார் சிலைக்கு காவி பூசுவதில் நம்பிக்கையில்லை.சாதி கலவரத்தை உருவாக்கும் முயற்சி என  இந்து முன்னணி  மாநிலத் தலைவர் பேட்டி

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாநில செயற்குழு சீராத்தோப்பு இந்து முன்னணி பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் திரு.காடேஷ்வரா சுப்ரமணியம் செய்தியாளர் களை சந்தித்த போது திராவிட கொள்கைகளை இந்து முன்னணி எதிர்க்கிறோம்.காவி என்பது புனிதம். பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவதில் நம்பிக்கையில்லை.இதில் சதி இருக்கிறது.சாதி கலவரத்தை உருவாக்கும் முயற்சி. உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு
யார் இச்செயலை செய்தார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.