திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் போலியாக ஆர்சி புக் தயாரித்த 3 பேர் கைது.

திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் போலியாக ஆர்சி புக் தயாரித்த  3 பேர் கைது.

திருச்சி (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிவந்தவர் சுந்தர்ராமன். இவர், திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய் இழப்பு செய்ததாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தான் எந்த ஒரு தவறும் செய்யாத நிலையில் எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டோம் என்பதை தெரிந்துகொள்ள, சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபொழுது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக வேலை பார்க்கும் அமலன்அன்புச்செல்வன் (29), பாலசுப்ரமணியன் (42), சுந்தரமூர்த்தி (21) ஆகிய மூவர் அலுவலக கோப்புகளை பயன்படுத்தி முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ஆர்சி புக் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

பால சுப்ரமணியன்

அமலன் அன்பு செல்வன்