திருச்சியில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி வாகன பேரணி
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வெஸ்ட்ரி பள்ளி, நீதிமன்றம், தலைமை தபால் நிலையம், அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 500க்கும் மேற்பட்டோர் தலைக்கவசத்துடன் பயணித்தனர்.
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியையும் டிஆர்ஓ துவக்கி வைத்தார். மற்ற வாகனங்களிலும் தேர்தல் பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டினர்.திருச்சி மாவட்டத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகி றது.*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*



Comments