திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 1.5 கோடி வசூல்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 1.5 கோடி வசூல்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் செ.மாரியப்பன் தலைமையில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ஆர்.ரவிச்சந்திரன் உதவி ஆணையர்/செயல் அலுவலர் மேற்பார்வையில் திருக்கோயில் மேலாளர் கு.தமிழ்ச்செல்வி,

இத்திருக்கோயில் நிலை-1 செயல் அலுவலர்கள் வேல்முருகன், வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், சரண்யா, மீனாட்சி, திருக்கோயில் ஆய்வாளர் மங்கையர்செல்வி, ச.உமா, சரக ஆய்வாளர்கள் பாஸ்கரன், பானுமதி, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்களால் இத்திருக்கோயிலின் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக வைக்கட்ட ஸ்ரீவாரி உண்டியல் மற்றும் தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.

இதில் 1 கோடியே 35லட்சத்து 18 ஆயிரத்து 948 ரூபாய் ரொக்கமும், 155 கிராம் தங்கம், 850 கிராம் வெள்ளி, மற்றும் 230 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் இருந்தன. மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீவாரி உண்டியல் 19 லட்சத்து 72ஆயிரத்து 651ரூபாய் மற்றும் தற்காலிக உண்டியல் ரூ. 5 லட்சத்து 46 ஆயிரத்து 364 தொகை கிடைக்கப்பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision