Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறை பகுதிகளில் இரு வேறு சம்பவங்களில் 10 பவுன் நகை பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டியில் இருந்து அன்னதானப்பட்டி சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி வயது (38) இவர்  கோவில்பட்டி தனியார் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருந்ததன் காரணமாக பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் கோவில்பட்டியில் இருந்து அன்னதானப்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால்  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் சங்கிலியை பறித்தது மட்டுமின்றி அவரை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு  தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வளநாடு  காவல் நிலையத்தில் ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து குளித்தலை பேருந்தில் ஏற முயன்ற மணப்பாறை ஆளிபட்டியை சேர்ந்த பழனியம்மாள் 77 என்பவரின் மூன்று பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 மேலும் இது போன்று கடந்த சில மாதங்களாகவே  திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் முதியவர்கள், தனியாக செல்லும் பெண்கள் அவர்களை  பின் தொடர்ந்து சென்று அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை வழிப்பறியில் ஈடுபடுவது அதிகமாகி வருகிறது. இது போன்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் தனியாக செல்லும் குறிவைத்து நகைகளை பறிக்கும் கும்பலை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொ துமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *