Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, 50 ஆயிரம் கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பறை பாரதியார் நகர் மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் வசித்து வருபவர் தீன் முகம்மது (53), இவருடைய மனைவி நஜீமா பேகம், இவர்கள் குடும்பத்துடன் செளதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். நஜீமா பேகம் கடந்த 3 மாத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டை அருகிலுள்ள ஜெயராஜ் என்பவர் பராமரித்து வருகிறார். நேற்று இரவு ஜெயராஜ் வீட்டில் விளக்குகளை போட்டு விட்டு அதிகாலையில் வீட்டை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ள 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கடந்தன. இதனையடுத்து மணப்பாறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் வசிக்கும் தீன் முகம்மதுவை தொடர்பு கொண்ட கேட்ட போது 15 பவுன் நகை, ரூ 50,000 ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *