ஓடும் பஸ்ஸில் 18 பவுன் நகை திருட்டு!!

ஓடும் பஸ்ஸில் 18 பவுன் நகை திருட்டு!!

திருச்சியிலிருந்து மதுரை சென்ற பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு போயுள்ளது.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(46). இவர் தனது தாயாரை சந்திக்க மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய கைப்பையில் 18 பவுன் தங்க நகையை எடுத்து சென்றுள்ளார்.

பின்பு தான் கொண்டு சென்ற தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisement

மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.