Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆடு, மாட்டுச்சந்தையில் தீபாவளி யொட்டி ரூ.2 கோடிக்கு விற்பனை 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2 மணிவரை மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. கறவை மாடு, வண்டி மாடு, உழவுமாடு, வளர்ப்பு மாடு, ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுக்குட்டிகள் என விவசாயிகள் அதிகளவில் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும்; மணப்பாறை மாட்டு சந்தைக்கு வந்துசெல்கின்றனர்.

இந்த வாரம் தீபாவளி பண்டிகையொட்டி  1000 ஆடு, 1500 மாடுகளும் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஆடு குறைந்தபட்சம்ரூ 3500 முதல் 15 ஆயிரம் வரையும், கறவை மாடு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்கப்படுகிறது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு தீபாவளி யொட்டி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *