போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய 2 பேர் கைது

போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் போலியான துப்பறியும் நிறுவன மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றவாளிகளை படிக்க காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சியில் உள்ள சிந்தனைபுரம் மற்றும் எடமலைப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் கூகுள் பிசினஸ் மூலம் திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தப்பட்டு வருவதை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய கள்ளக்குறிச்சி சேர்ந்த சதீஷ்குமார் (31) மற்றும் வசந்த் (24) ஆகிய இரண்டு பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO