Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குதிரை பந்தய வீரரை கொலை செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (26.05.23)-ந் தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டக்கர் ரோட்டில் உள்ள டீ கடை அருகே குதிரை ரேக்ளா பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வியால் உண்டான முன் விரோதத்தின் காரணமாக குதிரை பந்தய வீரர் ஒருவரை ஆபாசமாக திட்டியும், அருவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில்

பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த விஜி (23), த.பெ.ஆறுமுகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பூதலுரைச் சேர்ந்த அபிஷேக் (22), த.பெ.நித்யானந்தம் ஆகியோர் உட்பட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரிகள் விஜி மற்றும் அபிஷேக் ஆகியோர்களின் கொலை குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *