அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கிய திருநங்கைகள் 2 பேர் கைது - 9 பேர் தலைமறைவு

அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கிய திருநங்கைகள் 2 பேர் கைது - 9 பேர் தலைமறைவு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரிடம் அங்கிருந்த திருநங்கைகள் தகராறு ஈடுபட்டனர். இதை பார்த்த அரசு பேருந்து நடத்துனர் முத்துக்கருப்பன் இந்த தகராறு தடுக்க முயன்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது திருநங்கைகள் நடத்துனரை தாக்கினர்.

இதனை தொடர்ந்து திருநங்கைகளை கைது செய்ய கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எந்த பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லாமல் நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கண்டோண்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறு ஈடுபட்ட இரு தரப்பினரும் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து நடத்துனர் முத்துக்கருப்பனை தாக்கிய திருநங்கைகளான கார்த்திகா ன, ரேஷ்மா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் சிலரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு திருநங்கைகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO