திருச்சியில் வேன் விபத்துக்குள்ளாகி 25 பேர் காயம் -  3 பேர் கவலைக்கிடம்

திருச்சியில் வேன் விபத்துக்குள்ளாகி 25 பேர் காயம் -  3 பேர் கவலைக்கிடம்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருந்து பயணிகள் வேனில் 25 பேர் கோயம்புத்தூரில் உள்ள கோவிலுக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர். அப்போது முக்கொம்பு அருகே சென்று கொண்டிருந்தபோது கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து வேன் மீது மோத இருந்த நிலையில் வேனை இடதுபுறமாக திருப்பிய போது பின்னே வந்த சரக்கு வாகனம் மோதி பயணிகள் வேன் விபத்துக்குள்ளானது.

பயணிகள் வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிலைதடுமாறிய அரசு பேருந்து சாலை ஓரத்தில் இறங்கியது. இதனால் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn