108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 30 ஆம் தேதி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5.45
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது
இதனை அடுத்து ராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள்
அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி
அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர வில்லை ; சிகப்பு கல் நெற்றி பட்டை ; பின்புறம் சின்ன தொங்கல் பதக்கம்; பின் கொண்டையில் சிகப்பு கல் பட்டை சரம் வைர அபய ஹஸ்தம் தொங்கல் சாற்றி சந்தன வர்ண பட்டு உடுத்தி வெள்ளை கல் புட்டாபூர் பதக்கம் சிகப்பு கல் ரங்கூன் அட்டிகை
தாயத்து சரங்கள் அணிந்து
மூலஸ்தானத்தில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு பரமபத வாசலை கடந்து திருக்கோட்டைக்கு சென்று பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்றடைந்தார்.
இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் செல்வார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments