Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் 3 மான்கள் வேட்டை: கார் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் – மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!

இன்று 28.12.2025 காலை 5.00 மணியளவில் சிறுகனூர் காவல் ஆய்வாளர் திருமதி. இரா. சுகுணா அவர்கள் திருச்சி வனச்சரகம், திருச்சி பிரிவு, எதுமலை பீட் எல்லைக்கு உட்பட்ட வாழையூர்- பெரகம்பி சாலையில் தலைமை காவலர் திரு.C. செல்லதுரைஊர் காவல் படை வீரர் V.வீரமணி ஆகியோர் ரோந்து பணிக்கு சென்ற போது அவ்வழியாக சென்ற வெள்ளை நிற நான்கு சக்கர

வாகனத்தை சோதனை செய்ய முயன்ற போது காவலர்களை பார்த்தி உடன் காரை விட்டுவிட்டு தப்பித்து விட்டதாகவும், காரில் இறந்த நிலையில் 3 மான்களின் உடல்கள், 3 துப்பாக்கிகள் உடன் பிடித்து வைத்திருப்பதாக திருச்சி வனச்சரக அலுவலர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் திருச்சி வனச்சரக பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தனர்.விசாரணை அடிப்படையில் வன உயிரின குற்ற வழக்கு பதிவு

செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் திருச்சி அவர்களின் உத்தரவு படி தொடர்ந்து தப்பியோடிய எதிரிகளை பிடிக்கும் பொருட்டு வனவர்கள் தலைமையில் இரண்டு தனி குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட இறந்த மான்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேகரம் செய்து ஆய்வுக்காக AIWC அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *