பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உறையூர் காவல் ஆய்வாளா் ராமராஜன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற திருச்சி வடவூா் பிரசாத் (35), சாலைரோடு ரியாஸ்கான் (23), உறையூா் இா்பான் (23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 11 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தியா மார்ட் வெப்சைட் மூலம் மருத்துவரின் போலியான கையெழுத்துக்களை போட்டு கொரியர்கள் மூலமாக மாத்திரைகளை பெற்று விற்பனை செய்து வந்த மூவர் தலைமறைவு. 7 ரூபாய்க்கு வாங்கப்படும் மாத்திரை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கு மிக நீண்ட தூக்கம், உடல் சோர்வு, 2 அல்லது மூன்று வருடத்தில் மரணம் என்று காவல் ஆய்வாளர் ராமராஜ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision