விடுதி மாணவரிடமிருந்து தங்க நகையை பறித்த 3 நபர்கள் கைது

விடுதி மாணவரிடமிருந்து தங்க நகையை பறித்த 3 நபர்கள் கைது

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NIT Amber Hostel அருகில், கடந்த (19.11.2023)-ம் தேதி Hostel மாணவரிடமிருந்து சுமார் 3 பவுன் நகையை திருடி சென்றது தொடர்பாக, துவாக்குடி காவல் நிலைய குற்ற எண். 258/23 U/s 379 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில், வழக்கின் எதிரிகளான 1) சூர்யா (எ) ஜெயசூர்யா (23) த.பெ கிருஷ்ணமூர்த்தி, 30A பழனியப்பன் ஸ்டோர். காந்தி தெரு, ஜீவா நகர், 2) மணிகண்டன் (25) த/பெ பழனிசாமி, துவாக்குடி மலை வடக்கு, திருச்சி ஆகியோர்களை கைது செய்து, அவரிடமிருந்து மேற்படி 3 பவுன் நகையை பறிமுதல் செய்து,

திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை

நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர். மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட, ரவி போஸ்கோ (28) த/பெ ஜான் ராஜ். துவாக்குடி மலை என்பவர். தற்போது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 392/23 U/s 377,395 r/w 398,506 (ii) IPC & 3 (1)(r), 3 (1) (S), 3 (2) (va), 3(1)(w)(i) SC/ST ACT 1989 25 (1)(a) Arms Act 1959 அனுப்பப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision