Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உத்தமர்கோயிலில் வைகாசி திருவிழாவின் 3ம் நாளில் பூத வாகனத்தில் திருவீதி உலா.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பூஜைகள் நடைப்பெற்று கொடியினை கொடி மரத்தில் ஏற்றினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். இந்நிலையில் வைகாசி தேர்த்திருவிழாவின் 3 ம் நாளில் சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது.

தொடர்ந்து பூத வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா வருகின்ற 21-ம் தேதி காலை 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *