4 பவுன் தங்க நகைகள் திருடிய 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

4 பவுன் தங்க நகைகள் திருடிய 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீரன் நகர் பகுதியில் கடந்த (07.12.2023)-ம் தேதி வேல்முருகன் (47) என்பவரது வீட்டிலிருந்து 4 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பாக, (15.12.2023)-ம் தேதி சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண்.350/23 U/s 380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இது தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, எதிரிகளை தேடிவந்த நிலையில், மேற்படி வழக்கின் எதிரிகளான 1) மனோஜ்குமார் (20) த/பெ செந்தில்குமார், காமராஜபுரம், பெரியமிளகுபாறை, திருச்சி உட்பட 3 சிறார்களை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision