வாகன திருட்டில்  ஈடுபட்ட 4பேர் கைது- 48 வாகனங்கள் பறிமுதல்

வாகன திருட்டில்  ஈடுபட்ட 4பேர் கைது- 48 வாகனங்கள் பறிமுதல்

 மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர் பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில் வாகன திரட்டு வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு  மொத்தம் 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதில் பெரம்பூர் மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு எட்டு வாகனங்களும் அரியலூர் மாவட்டத்தில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 21 வாகனங்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு 19 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிய  நபர்களிடம்  ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களையும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டினார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn