Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பைக் திருடியதாக கூலித் தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 5 பேர் கைது

முசிறி தொட்டியம் அருகே பைக் திருடியதாக கூலி தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொட்டியம் அருகே விவசாய கூலி தொழிலாளி சடலமாக கிடந்த வழக்கில் ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 15-ம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தபுகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் இறந்து கிடந்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இறந்து கிடந்த நபரின் சடலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்தநிலையில் சடலமாக கிடந்தவர் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டி காலனி தெருவை சேர்ந்த வாழை இலை அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரேஷ் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷின் சடலத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தொட்டியத்தை சேர்ந்த டிரைவர்சிவா என்கின்ற சிவஞானம் (35) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இறந்து போன சுரேஷ் பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த அறிவழகன் (48) என்பவரின் பைக்கை திருடியதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்து சுரேஷை தேடி கண்டுபிடித்து வயல் வெளிப்பகுதிக்கு அழைத்து சென்று சிவா(33), அறிவழகன் (48), பெரிய பள்ளிபாளையம் செல்வராஜ் (58) மற்றும் ராஜேந்திரன் (55), சின்ன பள்ளிபாளையத்தை சேர்ந்த குணசேகரன் (38) ஆகியோர் தென்னை மட்டை கொண்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுரேஷ் இறந்துள்ளார்.சடலத்தை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு 5 நபர்களும் தலைமறைவாகி உள்ளனர்.பின்னர் போலீசுக்கு பயந்துகொல்லிமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆலோசனையின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் பெரும் முயற்சி எடுத்து ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.

இறந்து போன சுரேஷுக்கு புனிதா என்ற மனைவியும், இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.வாழை இலை அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரேஷ் இறந்து கிடந்த வழக்கில் தீவிர புலனாய்வு நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த திருச்சி போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து போலீசாரை வெகுவாக பாராட்டினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *