Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ரவுடிகள் அதிரடி வேட்டையில் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் என்பவர், பீட் காவல் ஆளிநர் ஸ்ரீதர் (கா.எண்-1563) என்பவருடன் ரோந்து அலுவலாக, ராஜ ராஜேஸ்வரி நகர், சோழமாதேவி கிராமத்தில் பணியில் இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் மூன்று நபர்கள், TN 45 BM 5466 என்ற எண்ணுள்ள பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

 அவர்களைப் பிடித்து விசாணை மேற்கொண்டதில், மேற்படி நபர்கள் இரும்பு ராடு, அருவாள், வாள் மற்றும் சுத்தியல் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மற்றும் இரண்டு நபர்கள் இணைந்து கொள்ளை குற்றங்கள், இதர குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கோடு வந்ததை ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு.

1 -ஜெயசீலன் (21), த.பெ. ராஜா, ஜெயில்பேட்டை, பாலக்கரை, திருச்சி 

எதிரி-2 பிரபு (எ) வெள்ளையன் பிரபு (23), த.பெ. ராபர்ட், ரயில்வே ஸ்டேசன், மணப்பாறை, 

எதிரி-3- வீரையா (எ) புலி (26), த.பெ. மதுரைவீரன் வாய்க்கால் தெரு, தோப்பு காலனி, மதுரை. 

எதிரி-4- விபின் ஜோஸ் (24), த.பெ. ஜோஸ். ஏ.என்.மங்களம், வள்ளுவர் பூங்கா தெரு, காரிப்பட்டி, சேலம்.

 எதிரி-5- சந்தோஷ்குமார் (18), த.பெ. ராபர்ட், ரயில்வே ஸ்டேசன், மணப்பாறை எனத் தெரியவருகிறது. 

மேலும் மேற்படி எதிரிகள் குற்ற செயலுக்கு பயன்படுத்தும் வண்ணம், தங்கள் வசம் வைத்திருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது, Navalpattu PS, Cr.No. 259/23, U/s 399 IPC-இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டும், அவர்களை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், மேற்படி எதிரிகளுக்கு பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *