மீன் பண்ணை குட்டையில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

மீன் பண்ணை குட்டையில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் ராஜகுமார்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் 5 வயது மகன் கிருத்திக்கை அழைத்து கொண்டு தொட்டியத்தில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று தனது மகனை தொட்டியம் அருகே உள்ள கீழக்கரைகாடு கிராமத்தில் உள்ள ரத்தினம் என்பவர் மீன் பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிருத்திக் தவறி விழுந்து மூழ்கினான். இதனை அறிந்த சிறுவனின் உறவினர்கள் கிருத்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அச்சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO