Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 55 வெளிநாட்டு வனவிலங்குகள் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் இதனை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மூலம் பறிமுதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்திவந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டுவரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு இனங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *