550 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்

550 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி அரியமங்கலம் திருமகள் தெரு பகுதியில் உள்ள செல்வின் த/பெ தாவீது என்பவர் குடோனில் சுமார் 550 கிலோ கலப்பட தேயிலை தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தை பறிமுதல் செய்தனர் 

இதனை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R .ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் கொண்ட குழுவால் அங்கிருந்த 550 கிலோ கலப்பட தேயிலை தூள் 

கலப்படத்துக்கு பயன்படுத்திய பாக்கெட்டுகள் ஒரு இரு சக்கர ஹோண்டா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn