வீட்டிற்குள் பதுங்கிய 6 அடி நீள சாரை பாம்பு - விரட்டி பிடித்த தீயணைப்புதுறை வீரர்கள்

வீட்டிற்குள் பதுங்கிய 6 அடி நீள சாரை பாம்பு - விரட்டி பிடித்த தீயணைப்புதுறை வீரர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பூங்கா ரோட்டில் வசித்து வருபவர் ஷேக் தாவுத் மனைவி ஜஹீராபானு. இவர்களது வீட்டின் ஆல்பெட்டாஸ் மேற்கூரையில் நீள பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற நிலைய அலுவலர் சக்திவேல்மூர்த்தி தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், தங்களது துறை கருவிகளை கொண்டு கூரை பகுதியில் இருந்த 6 அடி நீள சாரை பாம்பினை பிடித்தனர்.

பின்னர் வனத்துறையினர் மூலம் அந்த பாம்பு அருகில் உள்ள பொய்கைப்பட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. மழை காலங்களில் புதர்கள் அதிகம் வளர்ந்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அதிகம் வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn