70 பவுன் நகைகள்- 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

70 பவுன் நகைகள்- 1.5 கிலோ  வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருச்சி பெட்டவாய்த்தலை காவிரி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம், 55.இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியின் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி மூத்த மகள் சென்னையில் வசிக்கிறார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்குச் சென்று விட்டார் பஞ்சவர்ணம்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் ஒருவர் பஞ்சவர்ணம் கோழிகளுக்குத் தீவனம் வைக்க வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவல் கொடுத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் இருந்த 70 பவுன் நகை ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் இரண்டரை லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO