Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி சமயபுரத்தில் 72.70 லட்சம் உண்டியல் காணிக்கை!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 

ரூ. 72.70 லட்சம் ரொக்கம், 1.250 கிலோ தங்கம், 2 .6 கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன..

Advertisement

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள், பத்மா சேவா சங்கம் ,கோயில் பணியாளர்கள் எண்ணினர். அப்போது ரூ. 72 லட்சத்து 70 ஆயிரத்து 552 ரொக்கமும், 1 கிலோ 257 கிராம் தங்கமும், 2 கிலோ 622 வெள்ளியும், 14 அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *