Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி துவாக்குடி பகுதியில் மின்சாரம் பாய்ந்து 7 ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டிசாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் மகன் கிருஷ்ணகுமார் வயது (12). பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 ஞாயிற்றுக்கிழமை உடைகளை சலவை (அயன்) செய்வதற்காக அயன் பாக்ஸ்க்கான பிளக்கை சொருகி மின் ஸ்விட்சை ஆன் செய்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கியெறியப்பட்ட கிருஷ்ணகுமார் பலத்த காயமடைந்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *