தமிழ்நாடு முதலமைச்சர் – கழக தலைவர் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கழக முப்பெரும் விழாவிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் 17.09.25 புதன் கிழமை காலை 10:00 மணிக்கு திருச்சி வருகை தரும் தமிழக முதல்வர் – கழகத் தலைவர் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு கழக நிர்வாகிகள் அணி திரண்டு வருமாறு கேட்டுகொள்கிறேன்.
இந்தநிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறினார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments