Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்

திருச்சி, 17.10.2025 அண்ணா பல்கலைக்கழகத்தின் Zone–13 ஆண்கள் வாலிபால் போட்டி திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகமான BIT–இல் நடைபெற்றது. பல கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியில், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி (IGCE) அணி, UCE BIT அணியை 23–25, 25–19, 31–29 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் இடத்தை வென்றது.மூன்றாம் இடப் போட்டியில் MIET அணி, JJCET அணியை 25–22, 25–22 என்ற கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பெற்றது.

போட்டியின் வெற்றியாளர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக டீன் முனைவர் செந்தில்குமார் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

முதல் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடிய IGCE மாணவர்களுக்கு இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன், இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன், பதிவாளர் முனைவர் அனுசுயா, மற்றும் உடற்கல்வி இயக்குநர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *