Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா – சிறப்பு அனுமதி பாஸ் ரத்து

சட்டசபையில் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு 700 ரூபாய் மற்றும் 4000 ரூபாய் சிறப்பு பாஸ் கிடையாது அதற்கு பதிலாக விஐபிகளுக்கு மட்டும் மாற்று ஏற்பாடு வழங்க ஆலோசனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 19ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 20ஆம் தேதி அன்று பகல் பத்து உற்சவம் தொடங்க உள்ளது மற்றும் 30ஆம் தேதி இரா பத்து உற்சவத்தின் முதல் திருநாள் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.

உற்சவ நாட்களில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் இதற்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கோவில் பிரகாரங்கள் முழுவதும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில் மாநகர காவல் ஆணையர் காமினி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை உணவுத்துறை தீயணைப்பு துறை மின்சாரத்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் இந்த ஆண்டு கூடுதலாக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் கேட்டறிந்தனர்.

இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறையோடு இணைந்து அனைவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

சிறப்பு அனுமதி டிக்கெட் திருக்கோவிலில் கிடையாது என சட்டசபையில் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்காக கடந்த ஆண்டு 700 ரூபாய் மற்றும் 4000 ரூபாய் வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் இந்த ஆண்டு கிடையாது அதற்கு பதிலாக விஐபிகளுக்கு மட்டும் மாற்று பாஸ் வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதற்கு ஏற்றார் போல் பாஸ்கள் வழங்கி விஐபிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

மேலும் குறிப்பாக பக்தர்களுக்கு தேவையான பார்க்கிங் வசதி கழிப்பட வசதி குடிநீர் வசதி போன்றவற்றை கூடுதலாக வைக்கவும் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *