திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று தக்காளி முபாரக் ரவுடி மிரட்டி வாக்குவாதம் முற்றி அபுதாகிரை கத்தியால் குத்தினார். தக்காளி முபாரக் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை கோட்டை காவல் நிலைய போலீசார் திருச்சி கல்லணை சாலையில் சர்க்கார் பாளையம் அருகே விரட்டி பிடிக்க முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அவரை தற்பொழுது கைது செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
மேலும் இதுவரை 6 ரவுடிகளை திருச்சி மாநகரில் காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் காவல்துறையினர் பிடித்து தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பொங்கலுக்கு ரவுடி ஆப்ரேஷனில் இறங்கி மாநகர காவல்துறை தொடர்ந்து ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments