திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில்
பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தலைவரும், கல்லூரி கல்வி இயக்கத்தின் ஆணையருமான சுந்தரவல்லி வரவேற்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 97598 பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது அதே நேரம் விழா அரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 690 ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டம், 90 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் என மொத்தம் 780 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.காளிதாசன் மற்றும் செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றதால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.
அதேநேரம் விளையாட்டுத்துறையில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு முனைவர் பட்டம் வழங்க மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில் மகேஸ் பட்டம் வாங்காமல் புறக்கணித்தது விட்டார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று திருச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் உடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்று விட்டு அவருடன் கும்பகோணம் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments