Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி 75/25, த.பெ கருப்பு உடையார் பூசாரி, என்பவர் தனது சொத்துக்களை கடந்த 2010 ஆம் ஆண்டி தனது வாரிசுகளான அண்ணாதுரை 55/25, த.பெ கந்தசாமி, சின்னசாமி 48/25, த.பெ கந்தசாமி, என்பவர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டதாகவும், அதன் பிறகு, அண்ணாதுரை என்பவர் தனது தந்தை கந்தசாமியை சரிவர கவனித்து கொள்ளாததால், கந்தசாமி தனது சொத்துக்களைத் திரும்பக் கேட்டதாகவும், இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 15.06.2025 அன்று இரவு 01:30 மணிக்கு மேற்படி அண்ணாதுரை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அண்ணாதுரையை கந்தசாமி அரிவாளால் கழுத்தில் தாக்கி கொலை செய்துள்ளார்.

மேற்படி எதிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சின்னசாமி என்பவர் கொடுத்த புகாருக்கு மணப்பாறை காவல் நிலைய குற்ற எண். 319/25, U/s 103(1), 351(3) BNS ன் 15.06.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சவரிமுத்து ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (29.01.2026) திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், அவர்கள் எதிரி கந்தசாமி 75/25, த.பெ கருப்பு உடையார் பூசாரி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய்.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த மணப்பாறை காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஆண்டாள் என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *