திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 18.06.2021 அன்று தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, அதே பகுதியை சசிக்குமார் 29/21, த/பெ கணேசன் என்பவர் மேற்படி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, மேற்படி சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மேற்படி எதிரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கொடுத்த புகாருக்கு காட்டுப்புத்தூர் காவல் நிலைய குற்ற எண். 210/21, U/s 294(b), 506(i) IPC r/w 7, 8 of POCSO Act @ 294(b), 506(1), 450 IPC r/w 5(1), 6(1) of POCSO Act ன் 19.06.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி. ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (29.012026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் எதிரி சசிக்குமார் 29/21, த.பெ கணேசன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு.மணிகண்டன் என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments