ஒரு சில சலசலப்புகளால் மாறாது - திருச்சியில் வீரமணி பேச்சு

ஒரு சில சலசலப்புகளால் மாறாது - திருச்சியில் வீரமணி பேச்சு

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில்..... புதிய, நவீன, மதசார்பற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதை 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை ஒழிப்பது தான் பா.ஜ.க பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உலகத்தின் முதல் புரட்சியாளரான புத்தர் கூறி உள்ளார். ஜனநாயகம் வெல்லாவிட்டால், மாநிலங்களும், மத சுதந்திரங்களும் இருக்காது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டை காக்க தான் நாம் அனைவரும் கைக்கோர்த்து நிற்கிறோம்.இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எந்த செய்தியை கேட்டும் யாரும் குழப்பமடைய மாட்டார்கள். மக்களை நம்பி தான் இந்த கூட்டணி இருக்கிறதே தவிர தலைவர்களை நம்பி அல்ல. இந்தியா கூட்டணி பலகீனமடைகிறது என சிலர் கூறுவார்கள் அதை கேட்டு மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.

மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். பல தலைவர்கள் போராடி நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம் அதை நாம்  இழந்து விட கூடாது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision