வங்கியில் செலுத்த சென்ற ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

வங்கியில் செலுத்த சென்ற ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (12.09.23)-ந் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைமை தபால் நிலைய சிக்னல் அருகில் மளிகை கடை வியாபார பணமான ரூ.37,50,000/-த்தை பையில் வைத்து வங்கியில் செலுத்த ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோவை வழிமறித்து அரிவாளை காண்பித்தும், தடுக்க முயன்ற ஆட்டோ ஒட்டுனரை வெட்டி காயப்படுத்திவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தும் ஜாகீர் உசேன் (19), த.பெ.அப்துல் ஆசாத் மற்றும் நான்கு நபர்களை கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி ஜாகீர் உசேன் என்பவர் மீது எடமலைபட்டிபுதூர் காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்த சென்றதாக 2 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலைய எல்லையில் 2 திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது எனவே, எதிரி ஜாகீர் உசேன் என்பவர் தொடர்ந்து திருட்டு, பணம் மற்றும் தங்கசங்கிலி பறித்து செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். 

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision