கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகரில் கடந்த 26ம் தேதி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிராட்டியூரில் இளைய சமூகத்தை சீரழிக்கும் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த கோனார்குளம், ராம்ஜிநகரைச் சேர்ந்த முத்துராமன் என்பவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்தும், எதிரி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் முத்துராமன் என்பவர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும், ஒரு கொலை வழக்கும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கும், 2 திருட்டு வழக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் ராம்ஜிநகர் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்குகள் உட்பட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து முத்துராமன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி முத்துராமனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள முத்துராமன் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision