கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

Jun 27, 2025 - 20:39
Jun 27, 2025 - 20:50
 0  132
கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு  முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 25.06.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம்,ஈச்சம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முதல் முகாம்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் தொலைதூர கிராமங்களில் மொத்தம் 168 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் பணி மேற்கொள்ளுதல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிப் பணிகள் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி, வளர்ப்பு நாய்களுக்கு மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும்,

 கோழிகளுக்கு கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்தகால் நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். அவசர சிகிச்சைக்கு கால்நடை ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.

கால்நடைகளின் சாணம், இரத்த மாதிரிகள், சளி, பால், தோல் சுரண்டல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்படவுள்ளது. தீவன புல் விதைகள், கரணைகள் மற்றும் தாது உப்பு கலவைப் பைகள் வழங்கப்படும். அசோலா மற்றும் ஊறுகாய் புல் தயாரித்தல் தொடர்பான செயல்முறை குறித்து விளக்கமளிக்கப்படும்.

மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், பால் உற்பத்தி திறன் அதிகரிக்கவும், தீவனம் உற்பத்தி அதிகரிப்பது குறித்தும் கருத்தரங்கு நடத்தப்படும். கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்து சிறப்பு சிகிச்சையளிக்கப்படும்.

மேற்கண்ட பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். எனவே சுற்றுபுற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெறும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0