திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய பாஜகவின் முரட்டு பக்தர்:

திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய பாஜகவின் முரட்டு பக்தர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எரகுடி ஊராட்சி இந்த ஊராட்சியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் வசித்து வருபவர் விவசாயி சங்கர்.இவர் எரகுடி விவசாய சங்க தலைவராக உள்ளார். பாரதப் பிரதமர் மோடி கொண்டுவந்த பல திட்டங்கள் இவருக்கு பிடித்துப் போனதால் மோடியின் தீவிர ரசிகனாக சங்கர் மாறினார்.சங்கர் மனைவி பானுமதி இரண்டு மகன்கள் ஒரு மகளுடன் எரகுடியில் வசித்து வருகிறார்.

நீட் தேர்வின் மூலம் ஏழை எளிய மக்களும் மருத்துவ படிப்பு வசதியை பாரதப் பிரதமர் மோடி ஏற்படுத்தித் தந்ததால் தனது இளைய மகனை நீட் பயிற்சி வகுப்புகாக அனுப்பி வைத்துள்ள சங்கர் தனது மகன் உறுதியாக மருத்துவராக படித்து மோடியின் நீட்தேர்வு திட்டத்தால் வெற்றி பெறுவான் என கூறினார்.

Advertisement

விவசாயிகளுக்கு வருடம்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகை மற்றும் சொட்டு நீர் பாசனம் வீட்டுக்கொரு கழிப்பறைத் திட்டம் ஆகிய பாரத பிரதமர் மோடியின் திட்டத்தால் தான் பயன் அடைந்ததால் மோடிக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக சங்கர் கூறுகிறார்.

தானும் தனது மனைவியும் சேர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இந்த கோயிலை கட்டி உள்ளோம். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தினால் வருமை நிலையில் இருந்தோம்.

இந்நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டுநீர் பாசனம் கொண்டு வந்தது உள்ளிட்ட பல திட்டங்களால் மோடி மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக சங்கர் கூறினார். தற்போது பத்து ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் நீரை மிச்சப்படுத்தி விவசாயம் செய்து வருவதாக கூறினார். கூடிய விரைவில் பாஜக முன்னனி தலைவர்களை அழைத்து இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.