தேனீ வளர்த்தல் பயிற்சி

தேனீ வளர்த்தல் பயிற்சி

கரூர் மாவட்டம், தோகைமலை வட்டம் புழுதேரி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ICAR) வேளாண் அறிவியல் மையத்தில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைப்பெற்றது.

இந்த பயிற்சியில்  துவக்க உரையில் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் ஜெ. திரவியம் தேனீக்களின் முக்கியத்துவத்தை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பின் முக்கிய அம்சங்கள், வளர்ப்பு தேனீ வகைகள், தேனீ பெட்டி எண்ணிக்கை அதிகரிப்பது

இடத்தேர்வு, பயிர் மகசூல் அதிகரிப்பது, கோடைகால பராமரிப்பு, பூச்சி நோய் நிர்வாகம், வியாபார யுக்திகள் மற்றும் செயல் முறை விளக்கம் பற்றி வேளாண் அறிவியல் மைய பண்ணை மேலாளர் நா. ஸ்ரீதர் அவர்கள் விளக்க உரை அளித்தார்.

மதிப்பு கூட்டுதல் முறை பற்றி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இல. மாலதி விளக்க உரை அளித்தார்.  இப்பயிற்சியில் கரூர், திருச்சி, விருதுநகர், மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 22 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO