சுடு தண்ணீர் கொட்டியததில் குழந்தை உயிரிழப்பு.

சுடு தண்ணீர் கொட்டியததில் குழந்தை உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்டது சூக்கலாம்பட்டி. இப்பகுதியில் வசிப்பவர் விஷ்ணு மற்றும் பிரதிபா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் எஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருந்து உள்ளது. இந்த நிலையில் விஷ்னு லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

அவர் பணி நிமித்தமாக லாரிக்கு சென்றுவிட்டார். (28.12.2023) அன்று பிரதீபா தனது குழந்தை எஸ்வந்தை குளிப்பாட்டி விடுவதற்காக வீட்டில் சுடு தண்ணீர் வைத்துள்ளார் . வெந்நீரை எடுத்துக்கொண்டு குழந்தையை குளிப்பாட்ட செல்லும்போது கைத்தறி வெந்நீர் குழந்தை மேல் கொட்டியுள்ளது. உடனே குழந்தையை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குழந்தை எஸ்வந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision