ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - அதிர்ந்த வீடு.

ரவுடி வீட்டில்  நாட்டு வெடிகுண்டு வீச்சு - அதிர்ந்த வீடு.

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கின்ற மணிகண்டன்.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில் ஆட்டுத்தலை மணி என்கின்ற மணிகண்டன் அவரது வீட்டில் நேற்று (05.11.2023) அவரது சகோதரி வழக்கறிஞர் முத்துலட்சுமி, தாய் ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீட்டின் முன்பக்கம் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதில் சிறு காயமின்றி வீட்டில் உள்ள அனைவரும் உயிர் தப்பினர். வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.மாநகர காவல் ஆணையர் காமினி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பது விசாரணை நடைபெற்று வந்தது. 

முதற்கட்ட விசாரணையில் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதி சேர்ந்த வரதன் என்கிற வரதராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தீவிர விசாரணையில் தெரிகிறது. ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision