திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் - திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் - திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம் திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு. அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது. ஆனால் தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது. அதிமுகவை யாரும் மிரட்டவும் முடியாது. அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டிடிவி அதிமுகவுடன் கூட்டணி சேர தயார் என அறிவித்துள்ளது நல்ல கருத்து அதனை நான் வரவேற்கிறேன்.

தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன். அதிமுக தலைமைக்கு பன்னீர்செல்வம்  ஆட்சி நிர்வாகத்தில் பழனிச்சாமி என பழைய நிலை ஏற்பட்டால் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பன்னீர்செல்வம் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கிய  சட்ட விதிமுறைகளுக்கு எந்த ஒரு எந்த மாசும் ஏற்பட்டு விடக்கூடாது. ஜனநாயகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO